சிவகங்கை மாவட்டம், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இயற்கை மற்றும் உயிர்ம முறையில் சாகுபடி செய்யப்பட்ட வேளாண் விளைபொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை சந்தை வாய்ப்பு ஏற்படுத்துவது குறித்து விழிப்புணர்வு கூட்டத்தில், துறை ரீதியாக அமைக்கப்பட்டிருந்த இயற்கை அங்காடியின் பொருட்கள் குறித்த கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், பார்வையிட்டார். உடன் துணை இயக்குநர் (வேளாண் வணிக வேளாண்மை) ப.தமிழ்செல்வி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



