திருப்புவனம், நவம்பர் 22 –
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மற்றும் மணலூர் பகுதிகளில் அதிமுக கட்சியினரால் ஒட்டப்பட்ட பரபரப்பு போஸ்டரில் பெரும்பான்மையுடன் 2026 ல் ஆட்சிக் கட்டில் அமர்ந்தே தீரும் என்றும் 2026 ல் தமிழக ஆளுநர் எடப்பாடியார்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பது போன்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் வழக்கறிஞர் மணிமாறன் கூறுகையில்: முந்தைய அண்ணா திமுக ஆட்சியில் விலைவாசிகள் கட்டுக்குள் இருந்தது. சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தது. பெண்களுக்கு பாதுகாப்பு இருந்தது மின்சாரம் தங்கு தடையின்றி மக்களுக்கு சீராக கிடைத்தது. மின்சார கட்டணமும் ஏதும் ஏறவில்லை. தற்பொழுது திமுக அரசால் மின்சாரம் தினமும் நான்கு மணியில் இருந்து ஆறு மணி நேரம் வரை மின்சாரம் தடைப்பட்டு கொண்டே இருக்கிறது.
அது போன்று மின் கட்டணமும் ஒவ்வொரு நாளும் மின்சார கட்டணம் ஏறிக் கொண்டிருக்கிறது. வீட்டு வாடகையை காட்டிலும் மின்சார கட்டணம் அதிகமாக உள்ளது. எங்கு பார்த்தாலும் போதை ஆசாமிகளின் அராஜகம் அதிகமாகி வருகிறது. பொது மக்களுக்கும் குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பே இல்லை. எனவே இந்த விடியா திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டார்கள் என்று கூறினார்.



