சென்னை, ஆகஸ்ட் 11, 2024: கோயம்புத்தூரில் உள்ள அனன்யா நானா நானி ஹோம், மூத்த குடிமக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான சொர்க்கபுரியாகத் திகழ்கிறது. இந்த இல்லத்தை பிரபலப்படுத்தும் பிரசாரத்தின் ஒரு பகுதியாக சொர்க்கபுரியில் சுற்றுப் பயணம் என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு அதில் பங்கேற்க சென்னையிலிருக்கும் மூத்த குடிமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த மையத்தில் மூத்த குடிமக்கள் வாழ்வதற்கு அளிக்கப்படும் வசதிகளை நேரில் கண்டறிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 14 ஆண்டுகளாக கோவையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் அனன்யா நானா நானி ஹோம்ஸில் 3500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளோடு கடந்த 14 ஆண்டுகளாக மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டப் பணி முடிந்து வெற்றிகரமாக உரியவர்களுக்கு குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக புதிதாக கட்டப்பட உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் வில்லாக்களுக்கான முன்பதிவுகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் வாழும் மூத்த குடிமக்களுக்கு இங்கு நிலவும் அமைதியான வாழ்க்கையைப் பற்றிய புரிதலை நேரில் தெரிந்துகொள்ள விரும்புவோர் அனன்யாவின் விற்பனைக் குழுவை ஆகஸ்ட் 9 முதல் ஆகஸ்ட் 12, 2024 வரை சென்னை தாஜ் கன்னிமாராவில் தொடர்பு கொள்ளலாம். விருப்பமுள்ள மூத்த குடிமக்கள் நேரில் வந்து தங்களுக்கான பிரத்யேகமான இலவச டிக்கெட்டை பெற்று கோவையில் உள்ள அனன்யா நானா நானி ஹோம் பகுதியை பார்வையிடலாம். முன்பதிவுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்: 90437 40000.



