மார்த்தாண்டம், ஏப். 6 –
கிள்ளியூர் தொகுதி தவெக வேட்பாளராக ஆற்றூர் பகுதியை சேர்ந்த சபின் (32) என்பவர் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்ய கருங்கல் பகுதியில் இருந்து செண்டை மேளம் முழங்க பைக் மற்றும் கார்களில் ஊர்வலமாக தவெக தொண்டர்கள் சென்றனர்.
அப்போது அதிக சத்தம் எழுப்பும் ஹாரனை அடித்தபடியும் சென்றனர். பின்னர் தொலையாவட்டத்தில் அமைந்துள்ள கிள்ளியூர் தாலுகா அலுவலகத்திற்கு சென்று தேர்தல் அதிகாரி ஈஸ்வரநாதனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாகவும் பொது மக்களுக்கு இடையூறாக நடந்து கொண்டதாகவும் கருங்கல் போலீசார் வேட்பாளர் சபின், பொறுப்பாளர் வாவற பகுதியை சேர்ந்த கோபால் மற்றும் 10 பெண்கள் உட்பட 122 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


