சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி மேல நீலிதநல்லூர் ஒன்றியம் சேர்ந்தமரம் கஸ்பா ஊராட்சிக்குட்பட்ட வலங்கபுலிசமுத்திரம் கிராமமக்கள் தங்கள் பகுதியில் பகுதி நேர நியாய விலை கடை அமைத்து தர வேண்டும் என வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்தனர். கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று
வலங்கபுலிசமுத்திரம் கிராமத்தில் பகுதி நேர நியாய விலை கடை திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ, எம்பி ராணி ஶ்ரீ குமார் ஆகியோர் கலந்து கொண்டு பகுதி நேர நியாய விலை கடையை திறந்து வைத்தனர். இதில் கிளைக்கழகச் செயலாளர் குருசாமி, முருகன் ஒன்றிய துணைச் செயலாளர் வினு சக்கரவர்த்தி, காங்கிரஸ் வட்டாரத் தலைவர் எஸ்பி முருகையா, கிளைச்செயலாளர் சார்லஸ் மற்றும் கழக நிர்வாகிகள் பொருளாளர் சாமி முருகன் , கிருஷ்ணன், மூக்கையா, வெள்ளைச்சாமி, சண்முகையா, முத்துப்பாண்டி, சரவணன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வலங்கபுலிசமுத்திரம் கிராம நியாய விலை கடை திறப்புராஜா எம்எல்ஏ, எம்பி ராணி ஸ்ரீகுமார் பங்கேறபு



