By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: வில்லுக்குறி பேரூராட்சியில் தெரு நாய் கடித்து 7 பேர் காயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வில்லுக்குறி பேரூராட்சியில் தெரு நாய் கடித்து 7 பேர் காயம்
கனஂனியாகுமரி

வில்லுக்குறி பேரூராட்சியில் தெரு நாய் கடித்து 7 பேர் காயம்

Last updated: July 3, 2025 8:00 pm
July 3, 2025
35 Views
Share
SHARE

திங்கள்சந்தை, ஜூலை 3 –

வில்லுக்குறி பேரூராட்சி தேசிய நெடுஞ்சாலை ஓரம் சில மாதங்களுக்கு முன்பு விளை நிலத்தில் செப்டிக் டேங்க் கழிவுகள் கொட்டப்பட்டது. இதையறிந்த நாம் தமிழர் கட்சியினர் பொறி வைத்து செப்டிக் டேங்க் வாகனத்தை சிறை பிடித்த சம்பவம் நடந்திருந்தது. இதனிடையே பேரூராட்சி வளமீட்பு பூங்காவில் மருத்துவ கழிவுகள் கொட்டி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் வில்லுக்குறி பாலம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் உணவு, பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் எரித்த சம்பவம் நடந்தது.

இதேபோன்று பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இறைச்சி கழிவுகள், குப்பைகள் கொட்டப்படும் சம்பவம் நடந்து வருகிறது. இதனால் தெரு நாய்கள் பெருகி மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இவற்றை அகற்ற வேண்டும். தெருக்களில் இறைச்சி கழிவு கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பலர் செயல் அலுவலரிடம் மனு கொடுத்து வந்தனர். இது சம்பந்தமான பல வீடியோ காட்சிகளும் சமூக வலைதளத்தில் வைரலானது. பத்திரிகைகளும் செய்திகள் வெளியிட்டுள்ளன. இருந்தும் பேரூராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் கீழப்பள்ளம் பகுதியில் தெரு நாய் ஒன்று அந்த வழியாக வந்தவர்களை கடித்து குதறிய சம்பவம் நேற்று நடந்துள்ளது. கீழப்பள்ளம் பகுதியில் நேற்று காலை ஏராளமான தெருநாய்கள் அங்கும் இங்கும் சுற்றி திரிந்துள்ளன. அவைகளுக்குள் சண்டை ஏற்பட்டு மாறி மாறி கடித்துள்ளன. அப்போது ஒரு தெரு நாய் ஆக்ரோஷமாக வெறி வந்தது போல் அந்த வழியாக சென்ற ஒரு முதியவரை கடித்து குதறியது. அதோடு நிற்காமல் கீழப்பள்ளம் முதல் திருவிடைக்கோடு வரை ஓடி சென்று எதிரே வருவோரையும் போவோரையும் கடித்து குதறியது. பேரூராட்சி சுகாதார பணியாளர் உட்பட 3 பெண்கள், வாரியல் விற்பனை செய்ய அந்த வழியாக நடந்து வந்த வட மாநில இரண்டு தொழிலாளர்கள் உட்பட 4 ஆண்கள் என 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

கால்நடைகளையும் விட்டு வைக்காத வெறிநாய் அங்கு கட்டி வைத்திருந்த 2 ஆடுகளையும் கடித்து குதறி உள்ளது. இதில் ஒரு ஆட்டிற்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு சதை கிழிந்து ரத்தம் சொட்டிய சம்பவமும் நடந்துள்ளது. காயம் அடைந்தவர்கள் தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்த இளைஞர்கள் தெரு நாயை பிடிக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அது தப்பி ஒடி விட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். வில்லுக்குறி பேரூராட்சி 3-வது மற்றும் 4-வது வார்டுக்கு உட்பட்ட விவேகானந்தர் சந்திப்பு, அயோத்தியா காரியாலயம், திருவிடைக்கோடு அம்மன் கோவில், கிருஷ்ணன் கோவில், கீழப்பள்ளம் மாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி திரியும் தெரு நாய்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால் குழந்தைகள், மாணவர்கள், முதியவர்கள் என பலர் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்படும் என செயல் அலுவலருக்கு அப்பகுதி மக்கள் மனு கொடுத்து வருகின்றனர். மனிதர்களையும் கால்நடைகளையும் நாய் கடித்து குதறிய சம்பவத்தால் நேற்று காலை முதல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

பஸ்ஸில் பர்ஸ் திருட்டு; கர்ப்பிணி உட்பட 3 பெண்களிடம் போலீஸ் விசாரணை
ரேஷன் அரிசி கடத்திய ஆட்டோ பறிமுதல் டிரைவர் கைது
குமரி ரோட்டரி கிளப் இறகுப்பந்தாட்ட போட்டி
கன்னியாகுமரி கடைகள் ஏலம் விடுவதற்கு எதிா்ப்பு
பூதப்பாண்டி அருகே பாம்பு கடித்து மூதாட்டி பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

திமுக 30-வது வட்டம்தண்ணீர் பந்தல் திறப்பு

April 19, 2025
46 Views
அடுத்த மாதம் ஐந்தாம் தேதி டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி
தொண்டி செய்யது முகமது அரசு மேல்நிலைப் பள்ளியில் போதிய ஆசிரியர்கள் நியமித்து கல்வித்தரத்தை மேம்படுத்த கோரிக்கை
தூத்துக்குடி மாநகராட்சியில் முதற்கட்டமாக 5 வார்டுகளில் மீட்டர் பொருத்தப்பட்டு தினசரி குடிநீர் வழங்கப்படுகிறது – மேயர் ஜெகன் பெரியசாமி
சாதனை படைத்த மாற்றுத்திறனாளிக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account