கடையநல்லூர், செப். 29 –
தமிழக காங்கிரஸ் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவதூறாக பேசியதை கண்டித்து அருகே காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநில செயலாளர் ஆலங்குளம் செல்வராஜ் தலைமை வகித்தார். மாநில இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் எஸ்.எம்.எஃப். அப்துல் காதர், மாவட்ட துணைத் தலைவர்கள் சித்துராஜ், சிவராம கிருஷ்ணன், கிளாங்காடு மணி, முன்னாள் நகர தலைவர் சமுத்திரம் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தை வலியுறுத்தி பொது குழு உறுப்பினர் பாக்கியராஜ், கடையநல்லூர் சட்டசபை தொகுதி பொறுப்பாளர் மீராண் மைதீன், சங்கரன்கோவில் தொகுதி பொறுப்பாளர் வெள்ள பாண்டி, குருவிகுளம் ராமர், சிவகிரி கணேசன், முன்னாள் நகர செயலாளர் ரவி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் திடீரென எடப்பாடி பழனிச்சாமி படத்தை காங்கிரசார் கையில் எடுத்து செருப்பால் அடித்தனர். அப்பொழுது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அதனை கைப்பற்றி அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



