சுவாமிதோப்பு அய்யா வைகுண்ட அன்புவனத்தில் உலகத் தமிழ் கவிஞர்கள் சங்கம் மற்றும் அகத்திய மாமுனிவர் கலை இலக்கிய பண்பாட்டு ஆய்வு மையம் இணைந்து நடத்திய நூல் வெளியீட்டு விழா ஆய்வரங்கம் கவியரங்கம் மற்றும் விருது வழங்கும் விழா நடந்தது விழாவுக்கு குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கினார் அன்பு வனம் நிர்வாகி பேராசிரியர் ஆர் தர்ம ரஜினி முன்னிலை வகித்தார். உலகத் தமிழ் கவிஞர்கள் சங்க நிறுவனர் கவிஞர் முகிலை பா ஸ்ரீ வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக லண்டன் கவிஞர் சொற் சித்தர் கணேஷ் ராஜ், கவித் திலகம் வெற்றி பேரொளி ஆகியோர் கலந்து கொண்டு கவிஞர்களுக்கும் கல்லூரி பேராசிரியர்கள் உட்பட பலருக்கு விருது வழங்கி கௌரவித்தார்கள். நிகழ்ச்சியில் விருது பெற்றவர்களையும் எழுத்தாளர்களையும் முனைவர் சுந்தரலிங்கம், முது முனைவர் செல்வராஜன், தமிழ் இனியன் சீதாராமன் தவ புதல்வி இதழ் ஆசிரியர் முனைவர் சுபத்ரா செல்லத்துரை, வெண்பா, விஜய், முனைவர் காமராஜ் மற்றும் பலர் வாழ்த்தி பேசினர் முடிவில் ஈஸ்வரன் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை விஜி புரண் சிங் தொகுத்து வழங்கினார் நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் உள்ள மற்றும் லண்டனில் இருந்தும் கவிஞர்கள் கலந்து சிறப்பித்தனர் ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.



