களியக்காவிளை, ஜூன் 9 –
கிளீன்சீ பவுண்டேஷன் மற்றும் சூரியகோடு புனித எப்ரேம்ஸ் எம்.எஸ்.சி மேனிலைப் பள்ளி இணைந்து உலக பெருங்கடல் தினம் கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்கள் 324 பேரும் மாணவிகள் 231 பேர் என மொத்தம் 555 மாணவ மாணவிகளுக்கு கடல் பற்றிய விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
பள்ளி மாணவர்களுக்கு கடல்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் பள்ளியின் தாளாளர் அருட்தந்தை மரிய ஜாண், தலைமையாசிரியர் அருட்சகோதரி ஆன்றோ மரியா, மேலாளர் அருட்தந்தை அருள்தாஸ், இருபால் ஆசிரியர் மற்றும் அலுவலக பணியாளர்கள் மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.
கடலின் நன்மைகள், அதன் மாற்றங்கள் மற்றும் கடலின் மாசுபாடு பற்றிய விழிப்புணர்வு தகவல்கள் கிளீன் சீ பவுண்டேஷன் சார்பாக அதன் நிறுவன தலைவர் தங்கமணி, துணை தலைவர் ஆன்றனி மிக்கேல், செயற்குழு உறுப்பினர்கள் ஆபிரகாம் லிங்கன் மற்றும் பிரான்சிஸ்கால் சந்திரா ஆகியோர் வழங்கினர். மேலும் இந்நிகழ்வில் பொது செயலாளர் கின்ஸ்டன் பிரவின் ராஜ், செயலாளர் கலீல் றகுமான் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் விஜய சோபா, அர்வின்ஷா, புருசோத்தம தாஸ், சந்திரன், தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதியில் மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் கடல்களின் இயற்கை அழகை பாதுகாக்கவும், தூய்மையை மேம்படுத்தவும் மேலும் நெகிழிப் பயன்பாட்டை குறைத்து கடற்கரை சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டு நிகழ்ச்சி நிறைவடைந்தது.



