மார்த்தாண்டம், பிப். 6 –
மார்த்தாண்டம் அருகே காஞ்சிரகோடு பகுதியை சேர்ந்தவர் ஆல்பின் (34). கூலி தொழிலாளி. இவருடன் அதே பகுதியை சேர்ந்த கிறிஸ்டின் ராஜன் (30), ஆகாஸ் (24) ஆகியோர் சேர்ந்து சபை விழாவிற்காக அழைப்பிதழ் நோட்டீஸ் கொடுக்க சென்றுள்ளனர்.
அப்போது சிராயன்குழி பகுதியில் ஒரு வீட்டில் நோட்டீஸ் கொடுத்த போது, குன்னம்பாறை என்ற பகுதியை சேர்ந்த ஆல்வின் (40) , ஜெகன் (40), ஆனந்த் (27) மற்றும் கண்டால் தெரியும் 2 நபர்கள் என 5 பேர் கும்பல் அங்கு வந்தனர்.
5 பேரும் சென்று நோட்டீஸ் கொடுக்க வந்த ஆல்பன் உள்ளிட்டோர்களிடம் வீட்டில் இருந்த செல்போனை காணவில்லை. அது எங்கே? என கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டியதோடு தொடர்ந்து கற்களை எடுத்து அவர்கள் மீது வீசினர். மேலும் மறைத்து வைத்திருந்த அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து ஆல்பின் மார்த்தாண்டம் போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் குன்னம்பாறை ஆல்வின், ஜெகன், ஆனந்த் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


