By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாரத்தில் 6 நாட்கள் வந்தே பாரத் ரயில் சேவை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வாரத்தில் 6 நாட்கள் வந்தே பாரத் ரயில் சேவை
கனஂனியாகுமரிமாவட்டம்

வாரத்தில் 6 நாட்கள் வந்தே பாரத் ரயில் சேவை

Last updated: August 29, 2024 6:22 pm
August 29, 2024
81 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஆக 29 

 

தமிழ்நாட்டில்  தென் மாவட்ட மக்களின் ரயில் பயண நேரத்தை குறைக்கும் வகையில்

சென்னை – நாகர்கோவில் இடையே வாரத்தில் 6 நாட்கள் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ள நிலையில், இந்த ரயில் இயக்கப்படும் நேரம், நின்று செல்லும் ரயில் நிலையங்கள் விவரத்தை ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயில் சேவை, மதுரை – பெங்களூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவை ஆகியவற்றை பிரதமர் மோடி வரும் 31-ம் தேதி காணொலிக்காட்சி மூலமாக தொடங்கி வைக்கவுள்ளார். சென்னை சென்ட்ரலில் இருந்து இந்த வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க விழா நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

 

இந்நிலையில், இந்த இரண்டு ரயில்கள் இயக்கப்படும் நேரம், நின்று செல்லும் ரயில் நிலையங்கள் விவரம் உள்பட பல்வேறு தகவல்களை ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்விவரம்:சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயில் சேவை (20627-20678) வாரத்தில் புதன்கிழமை தவிர 6 நாட்கள் இயக்கப்படும். இந்த ரயில் எழும்பூரில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு, நாகர்கோவிலை அதேநாள் மதியம் 1.50 மணிக்கு அடையும்.

 

மறுமார்க்கமாக, இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு, அதேநாள் இரவு 11 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடையும். இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்தரயிலில் 16 பெட்டிகள் சேர்க்கப்பட உள்ளன.

 

மதுரை – பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே வந்தே பாரத் ரயில் சேவை (20671-20672) வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர 6 நாட்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில் மதுரையில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு, அதேநாள் மதியம் 1 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட்டை அடையும்.

 

மறுமார்க்கமாக, இந்த ரயில் பெங்களூரு கண்டோன்மென்ட்-ல் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு, அதேநாள் இரவு 9.45 மணிக்கு மதுரையை சென்றடையும். இந்தரயில் மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் 8 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. இவ்வாறு ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கோவை சித்தாபுதூர் பகுதி மக்கள் சென்னை தலைமைச் செயலகம் சென்று வீட்டுமனை பட்டா வேண்டி மனு
திருநங்கைகளுக்காக சிறப்பு குறைதீர்க்கும் முகாம்
கோலாகலமாக நடைபெற்ற ஆண்டு விழா
மக்கள் குறை களையும் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் ஆட்சியர் இளம்பகவத் வழங்கினார்
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், நீர்வளத்துறை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

புதுக்கடை அருகே பூட்டி இருந்த வீட்டை உடைத்து பணம் பொருட்கள் திருட்டு: போலீசார் வழக்கு

February 17, 2026
48 Views
கஞ்சா கடத்திய பெண் உள்பட 3 பேர் கைது!!!
பாலகோட்டில் பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை
வீடு இன்றி தவிக்கும் 90 வயது மூதாட்டி
மகளிர் அணி சார்பில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account