சிவகங்கை, செப். 27 –
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகேயுள்ள நடராஜபுரம் ராமாயி அம்மாள் நினைவு பள்ளி நிர்வாகத்தினரால் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் செயலர் டாக்டர் சண்முகம் வரவேற்புரையாற்றினார். பள்ளியில் வரலாற்று நிகழ்வுகளை அப்பள்ளியில் படித்த பழைய மாணவர் தேசிய நல்லாசிரியர் விருதுப் பெற்ற கண்ணப்பன் உரை நிகழ்த்தினார். கல்லல் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ந. நெடுஞ்செழியன், பள்ளி முகவாண்மைக்குழு தலைவர் முரு உடையப்பச் செட்டியார் மற்றும் பள்ளி நிர்வாக குழுவினர் கலந்து கொண்டனர். பள்ளி நிர்வாகக் குழு தலைவர் முத்து குமார் நன்றி உரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.



