தஞ்சாவூர், டிசம்பர் 20 –
தஞ்சாவூரில் இன்சூரன்ஸ் துறையில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசை கண்டித்து ஆயுள் காப்பிட்டு கழக ஊழியர் சங்கம் இதர சங்கங்களுடன் ஆர்ப்பாட்டம் ஆயுள் காப்பிட்டு கழக கோட்ட அலுவலக வாயிலில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு காப்பீட்டு கழக ஊழியர் சங்க கோட்டச்சங்க தலைவர் சேதுராமன் தலைமை தாங்கினார். அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தை சேர்ந்த கமலஹாசன், வங்கி ஊழியர் சங்கத்தை சேர்ந்த புவனேஸ்வரி, வினேத், காப்பிட்டு கழக முதல் நிலை அதிகாரிகள் சங்கத்தை சேர்ந்த ஜெய்சங்கர், லிகாய் முகவர் சங்கத்தை சேர்ந்த ராஜா, இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தை சேர்ந்த விஜயகுமார், பொது காப்பீட்டு ஊழியர் சங்கத்தை சேர்ந்த பிரபு, காப்பீடடு கழக ஓய்வூதியர் சங்கத்தை சேர்ந்த புண்ணிய மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.
நிறைவாக காப்பீடு கழக ஊழிய சங்க கோட்டச் சங்க இணைச் செயலாளர் சரவணவபாஸ்கர் நன்றி கூறினார். இந்நிகழ்வில் 200 க்கும் மேற்பட்ட காப்பீட்டு கழக ஊழியர்கள், அதிகாரிகள், முகவர்வர்கள், வங்கி ஊழியர் சங்கங்கள், காப்பீட்டு கழக ஒய்வூதியர்கள் பொதுகாப்பீட்டு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர் சங்கத்தார் பெருமளவில் பங்கேற்றனர்.



