சென்னை, ஜூன் 04 –
பல தலைமுறைகளாக, பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் தமிழ்நாட்டில் குழந்தைகள் வளர்ச்சியில் ஒரு பகுதியாக மாநிலத்தின் மொழி, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தினை கொண்டாடி வருகிறது. இதன் தொடர்ச்சியாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் திருக்குறள் சேலஞ் என்ற நிகழ்ச்சியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழகத்தின் சிறந்த அறிஞர்கள், கலைஞர்கள் மற்றும் கலாச்சார ஆர்வலர்கள் திருக்குறள் குறித்த அர்த்தமுள்ள கலந்துரையாடலில் ஈடுபட்டனர். குறிப்பாக, காலம் காலமாக திருக்குறள் எப்படி நமது வாழ்விற்கு ஏற்ற சிந்தனைகளை தொடர்ந்து பொருத்தமாக வழங்கி வருகிறது, மற்றும் இன்று இளைய தலைமுறையினர் எவ்வாறு அதன் கருத்துக்களை எடுத்துக் கொண்டு பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்து விவாதித்தனர். மேலும், இளைய தலைமுறையினர் திருக்குறள் கற்றுக்கொள்ளும் முறையை ஏன் புதுமையாகவும் அதிக ஈடுபாடு மிக்க வழியிலும் மாற்ற வேண்டும் என்பது பற்றியும் பேசினர். இந்த கலந்துரையாடலில் டாக்டர் ஜி.ஞானசம்பந்தன், விடியன் நாதஸ்வரம், சுகி சிவம் மற்றும் பாரதி பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
டேலண்டட் நிறுவனத்தால் கருத்தாக்கம் செய்யப்பட்ட இந்த புதிய முன்முயற்சியில், இப்போது பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் பேக்குகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிஸ்கட்டுகளில் திருக்குறளின் சொற்கள் பொறிக்கப்பட்டிருக்கும். அதாவது வெவ்வேறு சொற்கள் பேக்குகளில் உள்ள பிஸ்கட்டில் காணப்படும். மில்க் பிக்கிஸ் பிஸ்கட்களில் உள்ள சொற்களை ஒருங்கிணைத்து வரிசையாக அடுக்கும் போது மூன்று குறள்களை முழுமையாக உருவாக்கலாம்; அவை நட்பு, கற்றல், விடாமுயற்சி போன்ற கருப்பொருள்களை மையமாகக் கொண்டிருக்கும். இது வெறும் பிஸ்கட் பேக் மட்டுமல்ல; ஒரு பிரத்யேக மைக்ரோசைட் மூலம் நுகர்வோர் அவர்கள் கண்டுபிடிக்கும் திருக்குறள் சொற்களை சேகரிக்கவும், அதை ஒன்றாக்கி திருக்குறளை நிறைவு செய்யவும், அதன் மூலம் பரிசுகளை வெல்லவும் முடியும்.



