திருச்சி, மே 8 –
திண்டுக்கல்லில் இருந்து லோடு ஏற்றிச் சென்ற அருப்புக்கோட்டையைச் சேர்ந்த யுவராஜ் (27) என்ற வாகன ஓட்டுநர், திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (07.05.2026) அதிகாலை சுமார் 2:00 மணியளவில் வையம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீரனூர் அருகே வந்து கொண்டிருந்தபோது, வாகனத்தின் இன்ஜினில் புகை வந்துள்ளது. வாகனத்தை சாலையோரம் நிறுத்தி பார்த்தபோது, திடீரென வாகனம் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த வையம்பட்டி தீயணைப்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர்.



