கிருஷ்ணகிரி, ஜூலை 4 –
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுக்கா பர்கூர் பேருந்து நிலையத்திலிருந்து சின்ன பர்கூர் பகுதியில் உள்ள வீட்டிற்கு நடந்து சென்ற முதியவரை நான் உங்களை விட்டு விடுகிறேன் என்று கூறி அழைத்துச் சென்று அவரை தாக்கி பணம் ரூ.1200 செல்போன் மற்றும் வெள்ளி அரைநான் கயிறு ஆகியவற்றை பறித்து சென்றதாக பர்கூர் காவல் நிலையத்தில் சின்ன பர்கூர் பகுதியைச் சேர்ந்த சின்னப்பன் (72) புகார் அளித்ததின் பேரில் பர்கூர் காவல் ஆய்வாளர் அன்பழகன் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைத்து பர்கூர் காவல்துறையினர் விசாரணை செய்ததில் ராமசாமி நகர் எமகல்நத்தம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் மணிகண்டன் (22) கைது.
விசாரணை செய்து முதியவரிடமிருந்து பறித்துச் சென்ற செல்போன் பணம் மற்றும் அரைநாள் கயிறு வழிப்பறிக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்ற காவலுக்கு தர்மபுரி மாவட்ட சிறைக்கு அனுப்பப்பட்டார். குற்றச்செயலில் ஈடுபட்ட ஒரு சில மணி நேரங்களிலே குற்றவாளியை கண்டுபிடித்ததற்கு பொதுமக்கள் பர்கூர் காவல்துறையினரை வெகுவாக பாராட்டு வருகின்றனர்.



