தஞ்சாவூர், ஏப்ரல் 21 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு 7 நாட்கள் வெடிபொருள் விற்பனை நிலையங்களை மூட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார்.
தேர்தல் நடைபெறும் நாள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளையொட்டி வெடிபொருள் விற்பனை நிலையங்களை மூட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டசபை பொதுத் தேர்தல் அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யும் நோக்கில், வாக்குப்பதிவு நடைபெறும் அறிந்த 23ம் தேதி முன்னிட்டு இன்று செவ்வாய்க் கிழமை முதல் 24ம் தேதி வரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெடிபொருள் சட்டத்தின் கீழ் வெடிபொருள் விற்பனை நிலையங்கள் மற்றும் கிடங்குகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான அடுத்த மாதம் மே 4 தேதியை முன்னிட்டு 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை வெடிபொருள் விற்பனை நிலையங்கள் கிடங்குகள் மூடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



