தருமபுரி, ஜூலை 14 –
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பொப்பிடி கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி வெங்கடேசன் இவரது மனைவி தனலட்சுமி (40). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமாக இரண்டு ஏக்கர் விவசாய நிலம் உள்ளதாகவும், இவருடைய சகோதரர் மாரிமுத்துவின் மகன் செந்தில் அரசு (28) சென்ட்ரிங் கூலி வேலை செய்து வருகிறார்.
இவருக்கும் வெங்கடேசனுக்கும் விவசாய நிலத்திற்கு கிணற்றிலிருந்து தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. மீண்டும் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டது. அப்போது தனலட்சுமியிடம் வாக்குவாதத்தில் ஈடுட்பட்ட செந்தில்அரசு ஆத்திரத்தில் சென்ட்ரிங் வேலை செய்ய பயன்படுத்தும் இரும்பு சுத்தியால் தனலட்சுமியின் தலையில் வேகமாக அடித்துள்ளார். இதில் தனலட்சுமி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தர்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தலைட்சுமி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து உயிரிழந்த தனலட்சுமியின் உடல் பிரேத பரசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தகவலறிந்த மாரண்டஅள்ளி காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவான செந்தில் அரசை தேடி வருகின்றனர்.



