தருமபுரி, ஜுலை 8 –
நகர திராவிட முன்னேற்றக் கழக சார்பில் “ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர்கள் சேர்க்கை நகர செயலாளர் நாட்டான் மாது தலைமையில் நடைபெற்றது. இதில் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆ. மணி எம்பி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் ஒருங்கிணைப்பாளர் உதயசூரியன், தொகுதி பார்வையாளர் டி. செங்குட்டுவன் ஆகியோர் நாட்டாமை புரத்தில் வீடு வீடாக சென்று கழக அரசின் நான்காண்டு சாதனைகளை எடுத்துக் கூறி உறுப்பினர்கள் சேர்க்கையில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட துணைச் செயலாளர் ரேணுகா தேவி, மாவட்ட சிறுபான்மையினர் பிரிவுவின் அமைப்பாளர் ரஹிம், நகரத் துணைச் செயலாளர் முல்லவேந்தன், ஓட்டுனர் அணி விஜயன், வெல்டிங் ராஜா, கனகராஜ், காசிநாதன், மோகன், மாதேஷ், அழகு மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .



