தருமபுரி மாவட்ட அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மத்திய, மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் தருமபுரியில் உள்ள தொலைபேசி நிலையம் அருகில் மாவட்ட அனைத்து வணிகர்களின் சங்கத் தலைவர் எஸ். வைத்தியலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள கடைகளின் வாடகையின் மீதான 18 சதவீகித ஜி.எஸ்.டி வரி விதிப்பை திரும்ப பெற வலியுறுத்தியும், உள்நாட்டு வணிகத்தை சுரண்டும் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வலியுறுத்தியும், மாநில அரசு விதித்துள்ள ஆண்டுதோறும் ஆறு சதவீகித கூடுதல் சொத்து வரி விதிப்பை திரும்ப பெற வலியுறுத்தியும், வணிக உரிம கட்டண உயர்வு மற்றும் தொழில் வரி உயர்வை ரத்து செய்யக் கோரியும், குப்பைகள் மீதான வரியை மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக அறிவிக்க வலியுறுத்தியும், மாதாந்திர மின்கட்டண முறையை அமுல்படுத்த வலியுறுத்தியும், வணிக உரிமம் மூணாண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்தல் முறையை உடனடியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் ஆர்ப்பாட்ட த்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அனைத்து வணிக சங்கத்தின் செயலாளர் டி. எஸ். கிரிதர், மாவட்ட அனைத்து வணிக சங்கத்தின் பொருளாளர் சி. ரவிச்சந்திரன் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிக சங்கத்தைசார்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர்.



