தேனி, ஜூன் 10 –
தேனி மாவட்டம், காமாட்சிபுரம் கிராமத்தில் (10.06.2026) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பொதுமக்களின் கோரிக்கைகள் நேரடியாக கேட்கப்பட்டு, அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த முகாமில் மொத்தம் 522 பயனாளிகளுக்கு ரூ.2,09,63,699/- மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் இரா. வைத்திநாதன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத்மிஸ்ரா முன்னிலை வகித்து, அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவதன் முக்கியத்துவம் குறித்து பேசினார். முகாமில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், வீட்டு மனைப் பட்டாக்கள், சமூக பாதுகாப்புத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பொதுமக்களின் மனுக்களும் பெறப்பட்டு, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட மற்றும் வட்டார அளவிலான அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். மக்கள் குறைகளை நேரடியாக கேட்டு உடனடி தீர்வு காணும் நோக்கில் தமிழக அரசின் மக்கள் தொடர்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.



