வேலூர், டிச. 12 –
பல வயதானவர்களுக்கு லேசான உடல் செயல்பாட்டிற்கு பிறகு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது அல்லது ஓய்வில் இருக்கும் போது கூட வழக்கத்திற்கு மாறாக சோர்வாக உணர்கிறார்கள். இது போன்ற அறிகுறிகள் பெரும்பாலும் முதிர்ச்சியடைதலின் ஒரு பகுதியாக இருந்தாலும் அவை ஒரு அடிப்படை இதய நிலையை சுட்டிக்காட்டக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
அயோடிக் ஸ்டெனோசிஸ் என்பது கால்சியம் படிவுகள் இதய வால்வை சுருக்கி, இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தும் ஒரு நோயாகும். இதற்கு சிகிச்சையளிக்கப்படா விட்டால், இறுதியில் இதய செயலிழப்புக்கு வழிவகுக்கும். இந்தியாவில் மட்டும், 4.6 மில்லியனுக்கும் அதிகமான முதிர் வயதுடையகளுக்கு கடுமையான அயோர்டிக் ஸ்டெனோசிஸ் உள்ளது.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பாதி பேர் (50%) துரதிர்ஷ்டவசமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் உயிர் பிழைக்கவில்லை. சேதமடைந்த வால்வை மாற்றுவது மட்டுமே நீண்ட கால மற்றும் பயனுள்ள தீர்வாகும். வால்வு விறைத்து சுருங்கும்போது, இரத்த ஓட்டத்தை பராமரிக்க இதயம் கடினமாக செயல்படவேண்டும். மருந்துகள் உட்கொள்வது சிறிது நேரம் மூச்சுத் திணறல் அல்லது மார்பு வலி போன்ற அறிகுறிகளைக் குறைக்கலாம். ஆனால் அவை நோயின் தீவிரத்தை குறைக்காது. இறுதியில், சேதமடைந்த வால்வை மாற்றுவதுதான் சரியான இதய செயல்பாட்டை மீட்டெடுப்பதற்கான ஒரே வழியாக இருக்கும்.
டிரான்ஸ்கேட்டர் அயோர்டிக் வால்வு இம்ப்ளாண்டேஷன் (TAVI ) எனப்படும் ஒரு செயல்முறையில், நோயுற்ற வால்வை இதய திறப்பு அறுவை சிகிச்சைக்கு பதிலாக இதயத்தில் ஒரு சிறிய கீறல் மூலம் மாற்றலாம். இதன் விளைவாக விரைவான மீட்பு, குறுகிய கால மருத்துவமனையில் தங்குதல் மற்றும் விரைவில் வழக்கமான நடவடிக்கைகளுக்குத் திரும்பும் திறன் ஆகியவற்றை பெறுகின்றனர்.
வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் இருதயவியல் மற்றும் தலையீட்டு இருதய நோய் நிபுணர் பேராசிரியர் டாக்டர் ஜான் ஜோஸ் கூறுவது:- “வால்வு வடிவமைப்பு மற்றும் திசு தொழில்நுட்பத்தில் சமீபத்திய முன்னேற்றங்கள் நீண்டகால விளைவுகளை பெரிதும் மேம்படுத்தியுள்ளன. நவீன பாதுகாப்பு நுட்பங்கள் மீண்டும் கால்சிஃபிகேஷனைத் தடுக்க உதவுகின்றன. இதனால் வால்வுகள் திறமையாக செயல்படவும் நீண்ட காலம் நீடிக்கவும் அனுமதிக்கின்றன. வயதானவர்களில், ஆரம்பகால கண்டறிதல் மற்றும் சரியான சிகிச்சையானது கடுமையான சிக்கல்களைத் தடுக்கவும் வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாக்கவும் உதவும் என்று செய்தி குறிப்பில் தெரிவித்தார்.



