கோவை ஜூன்:07
தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ரியல் எஸ்டேட் துறையில் தனித்துவமாக இயங்கி வரும் வி கே புரமோசன்ஸ் நிர்வாக இயக்குனர் வெற்றிவேல் கோவை அத்தப்பகவுண்டன் புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப் பள்ளியில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்கள் உள்ளிட்ட உதவி பொருட்களை வழங்கிய பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசும்போது: கடந்த ஐந்து வருடமாக இந்த ரியல் எஸ்டேட் துறையில் தாங்கள் இருந்து வருவதாகவும் எங்களுக்கு வரும் வருமானத்தில் ஒரு பகுதியை ஏழை எளிய மக்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கு உதவி செய்து வருவதாகவும், அதில் ஒரு பகுதியாக இந்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு உதவிகளை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த இளம் வயதில் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து தற்சமயம் மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக வாழ்வில் முன்னேறிக் கொண்டிருப்பதாகவும், தற்சமயம் தங்களுடைய நிறுவனத்தில் 300க்கும் மேற்பட்டோர்க்கு வேலை வாய்ப்பு அளித்துள்ளதாகவும், இன்னும் சில மாதங்களில் மீண்டும் ஐந்து மாவட்டங்களில் தங்களுடைய கிளைகளை துவங்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி சண்முகம், ஐஎஸ்டிஓ தொண்டு நிறுவன நிறுவனர் லாசர் ராஜன் மற்றும் விகே ப்ரோமோசன்ஸ் நிர்வாக மேலாளர் ஜெயபிரகாஷ், ஹருண், மனித வள மேம்பாடு அலுவலர் அஜய் மற்றும் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



