திருச்சி,
நாமக்கல்லிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற லாரி, முசிறி காவிரி பெரியார் பாலம் அருகே எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் ஏற்றி வரப்பட்ட சுமார் ரூ. 6 லட்சம் மதிப்புள்ள 1.5 லட்சம் முட்டைகள் சாலையில் உடைந்து சிதறின. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கிரேன் உதவியுடன் கவிழ்ந்து கிடந்த லாரியை மீட்டனர். முட்டைகள் உடைந்து முட்டை கரு சாலையில் ஆறாக ஓடியது. லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பித்து ஓடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



