சங்கரன்கோவிலில் நடைபெற்ற தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் கூட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கண்டன உரையாற்றினார்
திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு க ஸ்டாலின் உத்தரவின் பேரில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் இந்தி திணிப்பு மற்றும் நாடாளுமன்ற தொகுதி சீரமைப்பை எதிர்க்கும் வகையில் தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என்ற தலைப்பில் கண்டன பொதுக்கூட்டம் மேலரதவீதியில் உள்ள கோகுலம் மண்டபத்தில் வைத்து நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பரமகுரு, யூஎஸ்டி சீனிவாசன், மாநில மருத்துவர் அணி துணைச்செயலாளர் செண்பக விநாயகம், மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் முன்னாள் எம்எல்ஏ முத்துச்செல்வி, மாவட்ட துணைச் செயலாளர்கள் மனோகரன், ராஜதுரை, புனிதா முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் சரவணன் தொகுத்து வழங்கினார். இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளர் திருப்பூர் கூத்தரசன் மற்றும் திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் மதுரை பாலா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தொடர்ந்து கூட்டத்தில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு பேசியதாவது ,
இந்தியாவிலேயே 75வது ஆண்டு பவள விழா கண்ட மாபெரும் இயக்கமான திமுக வின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு க ஸ்டாலின் உத்தரவின் பெயரில் தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என்ற கண்டன போராட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஒன்றிய பாஜக அரசு இந்தி திணிப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென் மாநிலங்களை வஞ்சிக்கும் வஞ்சிக்க நினைக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலே தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய நிதியை முறையாக வழங்க வேண்டும் என கேட்டபோது ஒன்றிய கல்வி அமைச்சர் தமிழ்நாடு எம்பிக்களை பார்த்து நாகரிகம் அற்றவர்கள் என்று பேசியதை தமிழ்நாடு எம்பிக்கள் வலுவாக எதிர்த்ததால் அது குறித்து மன்னிப்பு கேட்டதோடு, 100 முறை வேண்டுமானாலும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று பேசி உள்ளார். இதுதான் திராவிட முன்னேற்ற கழகம். எந்த ஒரு சூழ்நிலையிலும் பல்வேறு விதமான போராட்டங்களை கையில் எடுத்து வெற்றி கண்ட இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம். இந்தியாவிலேயே மக்களுக்காக செயல்படும் ஒரே இயக்கம் திமுக மட்டும் தான். எனவும் திமுகவின் சாதனைகளை கூறி மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ விரிவாக பேசினார்
கண்டன பொதுக்கூட்டத்தில்
யூனியன் சேர்மன் லாலாசங்கரபாண்டியன் சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், ,நகராட்சி சேர்மன்கள் சங்கரன்கோவில் உமா மகேஸ்வரி,புளியங்குடி விஜயா, வக்கீல் அணி முத்துராமலிங்கம் இளைஞர் அணி முகேஷ்,
மாணவரணி உதயகுமார், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சரவணன், அன்சாரி, ராஜராஜன், கார்த்தி, மாரிராஜ் மற்றும் திமுக மாநில மாவட்ட ஒன்றிய நகர கிளை வார்டு நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக உறுப்பினர்கள்,
பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



