உசிலம்பட்டி, ஆகஸ்ட் 13 –
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே வாலாந்தூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ அங்காள ஈஸ்வரி அம்மன் திருக்கோவிலில் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த கோவிலில் தினசரி பூஜைகளை முடித்துவிட்டு கோவில் பூசாரி வினோத் கோவிலை பூட்டிவிட்டு செல்வது வழக்கம். அவ்வாறு நேற்று இரவு 7:40 மணியளவில் கோவிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில் அதிகாலை 5 மணியளவில் கோவிலை திறந்த போது கோலின் மூல ஸ்தானத்தின் முன்பு இருந்த இரு சில்வர் உண்டியல்களும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து கோவில் செயல் அலுவலர் மற்றும் வாலாந்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாலாந்தூர் காவல் நிலைய போலீசார் செயல் அலுவலர் ஜெயராமன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து மதுரை மாவட்ட தடயவியல் நிபுணர் குழுவினரின் உதவியுடன் கைரேகை பதிவுகளை சேகரித்து வருகின்றனர்.
மேலும் கோவில் வளாகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் அடங்கிய ஹார்டிஸ்க் -யையும் திருட வந்த மர்ம நபர்கள் திருடி சென்ற நிலையில் எவ்வளவு பணம் கொள்ளை போனது என்றும் கோவில் உண்டியலை உடைத்து திருடிச் சென்ற மர்ம நபர்களையும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.



