நீலகிரி மாரச்.19.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக இருந்தாலும் விவசாயிகளால் மலை காய்கறிகள் மற்றும் பழ சாகுபடி அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் விளையும் கமலா ஆரஞ்சு, பேரி, ப்ளம்ஸ், பிச்சஸ், சப்போட்டா, பட்டர் புரூட், இவற்றோடு ஸ்ட்ராபெரி பழ உற்பத்தியும் விவசாயிகளால் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. பசுமை குடில்களில் வளர்க்கப்படும் மலர் சாகுபடி போல் தற்பொழுது ஸ்ட்ராபெரி பழங்கள் நீலகிரியில் சுற்றுலாப் பயணிகளால் அதிகமாக விரும்பப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் ஸ்ட்ராபெரி பழங்கள் நீலகிரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் நீலகிரியில் விளைவிக்கப்படும் ஸ்ட்ராபெரி பழங்கள் ஒரு கிலோவுக்கு ரூ. 350. முதல் 500 வரை விலை கிடைத்து வந்தது. இதனிடையே கடந்த வாரங்களில் கடும் வெயிலின் தாக்கத்திற்கு மத்தியில் திடீர் மழை பெய்தாலும் ஸ்ட்ராபெரி பயிர் பாதிப்படைந்து கால நிலை மாற்றத்தால் சாகுபடி செய்த பழங்கள் திடீரென தரம் குறைந்து விலை சரிவு ஏற்பட்டுள்ளது. மிதமான காலநிலையை கொண்ட கோத்தகிரி பகுதியில் கூக்கல் துறை, பேரகனி, எரிசபட்டா, கட்டபெட்டு, தொட்டணி, நெடுகுளா, போன்ற பகுதிகளில் ஸ்டாபெரி உற்பத்தி அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. எல்லா காலங்களிலும் நல்ல விலை கிடைத்து வந்த ஸ்ட்ராபெரி பழங்கள் கிலோ ரூ. 250க்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வரும் ஏப்ரல் மே மாதங்களில் ஸ்ட்ராபெர்ரி பழங்களின் விலை உயர்வதற்கான வாய்ப்பு உள்ளதாக கருதி தொடர்ந்து சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அறுவடைக்கு தயாராகி உள்ள ஸ்ட்ராபெர்ரி பழங்களை விவசாயிகள் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



