அரியலூர், செப்;03
அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியம் நக்கம்பாடி பஞ்சாயத்துக்குட்பட்ட நின்னையூர் காலனி தெரு உள்ள மாணவ மாணவிகள் 25 ஆண்டு காலமாக நடைபாதை கோரிக்கை வைத்து. பல மாதங்கள் ஆகியும் இன்னமும் இந்த நடைபாதை சீரமைக்கபடவில்லை அதனால் 02 ம் தேதி நேற்று காலை பள்ளி மாணவ மாணவிகள் பள்ளியில் படிப்பு வகுப்பை புறக்கணித்து உண்ணாநிலை பெற்றோருடன் அறப்போராட்டம் எடுத்துள்ளார்கள் மாவட்ட ஆட்சியாளர்களும் தமிழக முதல்வர்களும் கல்வித் துறையும் விரைந்து பள்ளி மாணவர்கள் செல்வதற்கு பாதை அமைத்து தர கோரிக்கை வைத்து மாணவர்களை திரட்ட உண்ணாநிலை போராட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி ஈடுப்பட்டுள்ளனர்.
உடனே தகவலறிந்து நேரில் வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை ஈடுப்பட்டு வந்த நிலையில் பாதையை சீரமைத்து பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டு குழந்தைகள் வகுப்பறைக்கு பள்ளி படிப்பை தொடர சென்றனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்