தஞ்சாவூர், பிப்ரவரி 23 –
தஞ்சாவூர் திலகர் திடலில் திராவிடர் கழக இளைஞர் அணி திராவிட மாணவர் கழக மாநில மாநாடு திராவிடர் மாணவர் கழக மாநில செயலாளர் செந்தூரப் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. திராவிட கழக மாவட்ட காப்பாளர் அய்யனார். மாவட்ட தலைவர் அமர் சிங். மாவட்ட செயலாளர் அருணகிரி மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். திராவிட கழக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் வெற்றி குமார் வரவேற்புரையாற்றினார். மாநாட்டில் மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி பேசியதாவது: சட்டசபை தேர்தலில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெறுவது உறுதி. மு.க.ஸ்டாலினுக்கு முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க கவர்னர் ஆர்.என். ரவி இருக்க வேண்டும். வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை பின்பற்றாத மத்திய அரசை கண்டித்து மார்ச் 3 ஆம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூறினார்.
மாநாட்டில் திமுக துணை பொது செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, முன்னாள் மத்திய இணை அமைச்சருமான திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினருமான எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், மத்திய மாவட்ட செயலாளர் துரை.சந்திர சேகரன், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பாராளுமன்ற உறுப்பினர் முரசொலி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குத்தாலம் கல்யாணம், மாநகராட்சி மேயர் சண். இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, திராவிடர் கழக பொதுச் செயலாளர் வி. அன்புராஜ், துணை தலைவர் கலி.பூங்குன்றன், இளைஞர் அணி மாநில செயலாளர் நாகை நாத்திகம் பொன்முடி உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட திராவிட கழக இளைஞரணி தலைவர் பிரகாஷ் நன்றியுரையாற்றினார்.



