திருப்பூர், ஆகஸ்ட் 21 –
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொங்கலூர் ஒன்றியம் காட்டூர் சுய உதவிக் குழு கட்டிடத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஆர்வத்தோடு பங்கேற்று அவர்களது கோரிக்கையை மனுவாக எழுதிக் கொடுத்தனர். இதில் திமுக மத்திய மாவட்ட துணைச் செயலாளர் முன்னாள் பொங்கலூர் சேர்மன் வழக்கறிஞர் குமார், முன்னாள் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் முத்தரத்தினம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலம், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் பங்கேற்றனர். இதில் பொதுமக்களுக்கு இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. மேலும் விவசாயிகளுக்கு இலவச விதைகளும் வழங்கப்பட்டது.



