ஊராட்சி செயலாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கிருஷ்ணகிரி தலைமை தபால் நிலையத்தில் அரசுக்கு கடிதங்கள் அனுப்பும் கவன ஈர்ப்பு போராட்டம் இன்று புதன்கிழமை நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டம்
மாவட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் மாவட்ட பொருளாளர் நமச்சிவாயம் முன்னிலையில் மாநில அமைப்பு செயலாளர் செங்கதிர் செல்வன் சிறப்புரை ஆற்றினார்.
அதில் அவர்பேசியது, பணியிடங்கள் 1996ல் உருவாக்கப்பட்டு 28 ஆண்டுகள் கடந்துள்ளது. 7ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி செயலாளர்கள் சிறப்புக் காலமுறை ஊதிய விகிதத்தில் இருந்து கால முறை ஊதிய விகிதத்திற்கு மாற்றப்பட்டனர். இது ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணியமர்த்தப்படும் பதிவு எழுத்தர் ஊதிய விகிதம். ஆனால் இதுவரை அரசுப் பணியாளர்களுக்கான எவ்வித சலுகைகளும் வழங்கப்படவில்லை. தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்திலும் இணைக்கவில்லை.
எங்களின் மாநில அமைப்பு மூலம் ஊராட்சி செயலர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை மையமாக வைத்து மாநில அளவிலான
மூன்றாம் கட்ட போராட்ட நடவடிக்கையில், 2 ஆம் கட்டமாக மாவட்ட தலைமை இடங்களில் இருந்து தமிழக முதல்வர், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், கூடுதல் தலைமை செயலர், இயக்குநருக்கு மாநிலம் முழுவதும் இன்று (செப்.18) 40 ஆயிரம் கடிதங்களை அனுப்புகிறோம். இதை தொடர்ந்து தற்செயல் விடுப்பு எடுத்து செப்.27 சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அனைத்து ஒன்றிய நிர்வாகிகளும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள் இறுதியாக மகளிர் அணி செயலாளர் பூர்ணிமா நன்றி உரை கூறினார்.



