மைலாடி அருகே உள்ள விருசடிகாலனியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் இவரது மகன் சக்தி வயது 24, பிஇ படித்து முடித்துவிட்டு தற்போது திருநெல்வேலி சட்டக் கல்லூரியில் எல். எல். பி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். சக்தி மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் சுசீந்திரம் அருகே உள்ள வழக்கம்பாறையில் இருந்து மைலாடி ரோட்டில் சென்று கொண்டிருக்கும் பொழுது. கரையான்குழி சி. எஸ். ஐ. சர்ச் அருகில் செல்லும் போது எதிரே வந்த அரசு பஸ் மோதியதில் சக்தி கீழேவிழுந்ததில் முகம் தலையில் காயம் பட்டவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சக்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சக்தியின் தந்தை ராமகிருஷ்ணன் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் பொறுப்பு இன்ஸ்பெக்டர் சரவணன்,சப்இன்ஸ்பெக்டர் லிபிபால்ராஜ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
சுசீந்திரம் அருகே அரசு பஸ் மோதி சட்டக் கல்லூரி மாணவர் சாவு
You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics