இரணியல், டிச. 10 –
இரணியல் சந்திப்பு அருகே செயல்படும் அரசு மதுபான கடை பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக இருக்கிறது என்று பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். இந்த நிலையில் இதனுடன் இணைந்த பார் சட்ட விரோதமாக செயல்படுகிறது என்று நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனை அடுத்து பார் மூடப்பட்டது.
அதனை தொடர்ந்து மதுப் பிரியர்கள் மது வாங்கி விட்டு ஆங்காங்கே நின்று கொண்டு மது அருந்துதல் என்பது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மாவட்டம் ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இடம் பலமுறை மனு அளித்தனர்.
இதை அடுத்து இரணியல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சேவியர் பிராங்க்ளின் மற்றும் போலீசார் இரணியல் சந்திப்பு அருகே பொது இடத்தில் வைத்து மது அருந்திய பிலாக்கோடு பகுதியில் சேர்ந்த பிச்சை பாண்டியன் (35), லட்சுமி புரம் பெர்லின் (31), முரசங்கோடு எட்வின் ஜோஸ் (45), திருவிதாங்கோடு ஜாண் பெர்லின் (35) ஆகிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் தொடர்ந்து மதுப் பிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


