புதுக்கடை, ஜன. 27 –
புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியை சேர்ந்தவர் அப்புகுட்டன் மனைவி லலிதா (64). இவர் இன்று கூட்டாலுமூடு பகுதியில் கடைக்கு வந்துவிட்டு சாலையில் வீடு நோக்கி நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பைக் ஒன்று அதிவேகமாக லலிதா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட லலிதாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி செய்து விட்டு மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்த லலிதா மகன் சத்திய தாஸ் என்பவர் அளித்த புகாரின் பேரில், ரெஜின் (24) என்பவர் மீது புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இனயம் சின்னதுறை பகுதியை சேர்ந்த மரிய புஷ்பம் (76) என்பவர் சின்னத்துறை பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரில் வந்த இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த சயன் மெர்பின் (22) என்பவர் ஓட்டி வந்த பைக் மூதாட்டி மீது மோதியது. இதில் மரியபுஷ்பத்திற்கு பலத்த காயம் ஏற்பட்டு, மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்தும் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


