சென்னை, ஆகஸ்ட் 18 –
சென்னை மண்டல இந்து அறநிலையத்துறை திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து அளிக்கும் நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தலைவர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இதன் ஒரு பகுதியாக சென்னை கோயம்பேடு அருள்மிகு குறுங்காலீஸ்வரர் திருக்கோயிலில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கான பொது விருந்தில் பங்கு பெற்றார். உடன் அறநிலையத் துறை அதிகாரிகள், பணியாளர்கள் உடனிருந்தனர்.



