கோவை, மே 05 –
உலக கை சுகாதார தினத்தை முன்னிட்டு கோவை சக்தி சாலை கோவில்பாளையம் பகுதியிலுள்ள கே.எம்.சி.எச் மருத்துவமனை வளாகத்தில் கே.எம்.சி.எச். மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா.க.பழனிசாமி தலைமையில் கைகளை சுத்தமாக வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், சோப்புடன் கை கழுவுவதன் அவசியத்தை பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெரிய ஒரு பலகையில் கையெழுத்திட்டு அவரது கடமையை செய்தார்.
மேலும் இதன் முக்கியத்துவம் குறித்து: நோய்த்தடுப்பு, தொற்றுநோய்கள் மற்றும் கிருமி பரவுவதைத் தடுப்பதற்காக கைகளை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் உயிரைக் காப்பதாகும், நோய்களைத் தவிர்க்க கைகளை சோப்பு மற்றும் நீர் கொண்டு தவறாமல் கழுவ வேண்டும் என்பதே இந்நிகழ்வின் நோக்கமாகும். இதில் உடன் அரவிந்தன் நர்சிங் ஹோம் டாக்டர். சாமிநாதன், மெடிக்கல் டைரக்டர் டாக்டர். விமல்குமார், சீனியர் வைஸ் பிரசிடெண்ட் டாக்டர். ரஞ்சித், ஜெனரல் மேனேஜர் சோமசுந்தரம், அட்வைசர் தினமணி , உதவி ஆய்வாளர் ஞானசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



