“நிறைந்தது மனம்” நிகழ்ச்சியில், தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை திட்டங்களின் கீழ் பயனடைந்த திருவாரூர் மாவட்ட மாற்றுத்திறனாளி நபர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் செயல்படும் அரசானது மக்கள் நலன்காக்கும் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.
அதனடிப்படையில், மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பில், திருவாரூர் மாவட்டத்தில் 26951 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை 18360 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மனவளர்ச்சி குன்றியோர், கடுமையாக கைகால் பாதிக்கப்பட்டோர், முதுகு தண்டுவடம் பாதிப்பு மற்றும் நாள்பட்ட நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டோர், தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.2000ஃ- வீதம் 2021-2022 ஆண்டில் 4687 பயனாளிகளுக்கு ரூ.93775127ஃ- யும் 2022-2023 ஆண்டில் 4904 பயனாளிகளுக்கு ரூ.11,42,82,000ஃ- யும், 2023-2024 ஆம் ஆண்டில் 5021 பயனாளிகளுக்கு ரூ.119242000ஃ-யும் 2024-2025 ஆம் ஆண்டில் 5017 பயனாளிகளுக்கு ரூ.7,02,36,000ஃ-யும் மொத்தம் ரூ.33,43,22,727ஃ- பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு மாதந்தோறும் வரவு வைக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பராமரிப்பு உதவிததொகை பெற்றுவரும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டோரை பராமரிக்கும் உதவியாளருக்கு மாதந்தோரும் ரூ.1000ஃ- கூடுதலாக வழங்கும் திட்டத்தின்கீழ் 2021-2022 ஆண்டில் 35 பயனாளிகளுக்கு ரூ.370000ஃ-யும் 2022-2023 ஆண்டில் 50 பயனாளிகளுக்கு ரூ.520510ஃ-யும், 2023-2024 ஆம் ஆண்டில் 214 பயனாளிகளுக்கு ரூ18,47,310ஃ-யும் 2024-2025 ஆம் ஆண்டில் 325 பயனாளிகளுக்கு ரூ.35,91,000ஃ-யும் மொத்தம் ரூ.63,28,820ஃ- பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு மாதந்தோறும் வரவு வைக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் செய்ய மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கும் திட்டத்தின்கீழ் கடன்தொகையில் மூன்றில் ஒருபங்காக அதிகபட்சம் ஒரு நபருக்கு ரூ.25000ஃ- என 2021-2022 ஆண்டில் 31 பயனாளிகளுக்கு ரூ.7,58,336ஃ- யும் 2022-2023 ஆண்டில் 55 பயனாளிகளுக்கு ரூ.1224111ஃ- யும், 2023-2024 ஆம் ஆண்டில் 43 பயனாளிகளுக்கு ரூ.984333ஃ-யும் 2024-2025ஆம்ஆண்டில் 73 பயனாளிகளுக்கு ரூ.1529450ஃ-யும் மொத்தம் ரூ.4496230ஃ-க்கு பயனாளிகள் கடன் பெறும் வங்கிகளுக்கு மிண்ணனு பட்டுவாடா மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சுயதொழில் செய்து தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திகொள்ள பயனுள்ளதாக இத்திட்டம் அமைகிறது.
கைகால் பாதிக்கப்பட்ட, செவித்திறன் குறைபாடுடைய, பார்வைகுறைபாடுடைய மற்றுத்திறனாளிகளை திருமணம் செய்துகொள்ளும் நல்ல நிலையில் உள்ளவர்களுக்கும் தம்பதிகள் இருவருமே மாற்றுத்திறனாளிகளாக இருந்தாலும் பயன்பெறும் வகையில் 4 வகையான திருமண உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் கீழ் 12 ஆம் வகுப்பு வரை கல்வி பயின்றவர்களுக்கு ரூ.25000ஃ- தொகையும் 8கிராம் தங்க நாணயமும் பட்டப்படிப்பு மற்றும் பட்டயபடிப்பு படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50000ஃ- தொகையும் 8 கிராம் தங்க நாணயமும் வழங்கும் திட்டத்தின்கீழ் 2021-2022 ஆண்டில் 7 பயனாளிகளுக்கு ரூ.3,75,000ஃ-யும் 2022-2023 ஆண்டில் 15 பயனாளிகளுக்கு ரூ. 6,50,000ஃ- யும், 2023-2024 ஆம் ஆண்டில் ரூ.5,50,000ஃ- யும் 2024-2025 ஆம் ஆண்டில் ரூ.5,50,000ஃ-யும் மொத்தம் ரூ 21,25,000ஃ- பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.21,25,000ஃ-யும் கிராம் தங்க நாணயங்களும் வழங்கப்பட்டுள்ளது.
ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரிவரை பயிலும் மாற்றுத்திறனாளி மாணக்கர்களுக்கு கல்வி உதவித்தொகையாக 2021-2022 ஆண்டில் 330 பயனாளிகளுக்கு ரூ. 11,45,000ஃ-யும் 2022-2023 ஆண்டில் 328 பயனாளிகளுக்கு ரூ.11,97,000ஃ- யும், 2023-2024 ஆம் ஆண்டில் 330 பயனாளிகளுக்கு ரூ.20,74,000ஃ- யும் 2024-2025 ஆம் ஆண்டில் 365. பயனாளிகளுக்கு ரூ.23,28,000ஃ-யும் மொத்தம் ரூ.67,44,000ஃ-யும் மாணக்கர்களின் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மேலும் 9 ஆம் வகுப்பிற்கு கல்வி பயிலும் 75 சதவீதத்திற்கு மேல் பார்வை குறையுடைய மாணக்கர்களுக்கு அவர்களுக்கு பயில உதவியாக இருக்கும் உதவியாளருக்கு வாசிப்பாளர் உதவித்தொகையாக 2021-2022 ஆண்டில் 11 பயனாளிகளுக்கு ரூ. 44,000ஃ- யும் 2022-2023 ஆண்டில் 10 பயனாளிகளுக்கு ரூ.46,000ஃ-யும், 2023-2024ஆம் ஆண்டில் 6 பயனாளிகளுக்கு ரூ.20000ஃ-யும் 2024-2025ஆம் ஆண்டில் 7 பயனாளிகளுக்கு ரூ.32,000ஃ-யும் மொத்தம் ரூ.1,42.000ஃ-யும் மாணக்கர்களின் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
10 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நலவாரியத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டு அதன்மூலம் மாற்றுத்திறனாளிகளின் மகன் ஃ மகளுக்கு கல்விஉதவித்|| தொகையாகவும் மாற்றுத்திறனாளிகள் இயற்கை ஃவிபத்து இறப்பு ஏற்படின் வாரிசுதாரகளுக்கு உதவித்தொகையாகவும் 2022-2023 ஆண்டில் 123 பயனாளிகளுக்கு ரூ.12,43,000யும், 2023-2024 ஆம் ஆண்டில் 100 பயனாளிகளுக்கு ரூ.10,20,500ஃ-யும் 2024-2025ஆம் ஆண்டில் 50 பயனாளிகளுக்கு ரூ.675000ஃ-யும் மொத்தம் ரூ.29,38,500ஃ- வழங்கப்பட்டுள்ளது.
0-6 வயதுடைய செவித்திறன் குறையுடையோருக்கான ஆரம்பகால பயிற்சி மையத்தில் 20 மாணக்கர்களுக்கு பயிற்றுவிக்கும் 2 சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய மானியமாக 2021-2022 ஆண்டில் ரூ.3,64,000ஃ- யும் 2022-2023 ஆண்டில் ரூ.4,60,000ஃ-யும், 2023-2024 ஆம் ஆண்டில் ரூ.5,02,000ஃ-யும் 2024-2025ஆம்ஆண்டில் ரூ.5,02,000ஃ-யும் மொத்தம் ரூ.18,28,000ஃ-இத்திட்டத்தை செயல்படுத்தும் தொண்டு நிறுவனங்கள் மூலம் வழஙகப்படுகிறது.
0-6 வயதுடைய மனவளர்ச்சி குறையுடையோருக்கான ஆரம்பகால பயிற்சி மையத்தில் 40 மாணக்கர்களுக்கு பயிற்றுவிக்கும் 2 சிறப்பாசிரியர்களுக்கு ஊதியமானியமாக 2021-2022 ஆண்டில் ரூ.9,24,000ஃ- யும் 2022-2023 ஆண்டில் ரூ.11,28,000ஃ-யும், 2023-2024 ஆம் ஆண்டில் ரூ.9,24,963ஃ-யும் 2024-2025ஆம் ஆண்டில் ரூ.9,27,943ஃ-யும் மொத்தம் ரூ.39,04,906ஃ- இத்திட்டத்தை செயல்படுத்தும் தொண்டு நிறுவனங்களுக்கு வழஙகப்படுகிறது.
14 வயதுக்குட்பட்ட மனவளர்ச்சி குறைபாடுடைய 40 மாணக்கர்களுக்கு 2 சிறப்பு பள்ளிகள் மூலம் சிறப்பாசிரியர்களைகொண்டு கல்வி கற்பிக்க 4 சிறப்பாசிரியர்கள் மற்றும் 2 தசைபயிற்சியாளர்களுக்கு ஊதிய மானியமாக 2021-2022 ஆண்டில் ரூ.9,80,000ஃ- யும் 2022-2023 ஆண்டில் ரூ.12,96,000ஃ-யும், 2023-2024 ஆம் ஆண்டில் ரூ.13,30,548ஃ-யும் 2024-2025 ஆம் ஆண்டில் ரூ.12,58,800ஃ-யும் மொத்தம் ரூ.48,65,348ஃ- இத்திட்டத்தை செயல்படுத்தும் தொண்டு நிறுவனங்களுக்கு வழஙகப்படுகிறது.
மனவளர்ச்சி குன்றியயோருக்கான சிறப்புப்பள்ளியில் தங்கி பயிலும் மாணக்கர்களுக்கு உணவு வழங்கிட உணவூட்டு மானியமாக 2021-2022 ஆண்டில் ரூ.2,61,000ஃ-யும், 2022-2023 ஆண்டில் ரூ.3,48,000ஃ- யும், 2023-2024 ஆம் ஆண்டில் ரூ.3,12,000ஃ- யும் 2024-2025 ஆம் ஆண்டில் ரூ.2,80,000ஃ-யும் மொத்தம் ரூ.12,01,000ஃ- இத்திட்டத்தை செயல்படுத்தும் தொண்டு நிறுவனங்களுக்கு வழஙகப்படுகிறது.
14 வயதுக்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கு தொழிற்பயிற்சி அளிக்கும் விதமாக 40 பேர் தங்கி பயிற்சி பெறும்வகையில் தொண்டுநிறுவனம் மூலம் செயல்படும் மனவளர்ச்சிகுன்றியோருக்கு இல்லத்திற்கு ஆண்டு செலவினமாக 2021-2022 ஆண்டில் ரூ.11,04,100ஃ-யும், 2022-2023 ஆண்டில் ரூ.12,14,800ஃ-யும், 2023-2024 ஆம் ஆண்டில் ரூ16,48,800ஃ-யும் 2024-2025ஆம்ஆண்டில் ரூ.17,37,800ஃ-யும் மொத்தம் ரூ.57,05,500ஃ-. இத்திட்டத்தை செயல்படுத்தும் தொண்டு நிறுவனங்களுக்கு வழஙகப்படுகிறது.
மனநலம் பாதிக்கப்பட்டு பொது இடங்களில் சுற்றி திரியும் நபர்களை தொண்டு நிறுவனங்கள் மூலம் மீட்டு மனநல காப்பகத்தில் வைத்து பராமரத்திட இல்லத்தில் மீட்பதற்கு ஒரு நபருக்கு ரூ.1500ஃ- வீதம் 2021-2022 ஆண்டில் ரூ.27,000ஃ- யும் 2022-2023 ஆண்டில் ரூ.19,500ஃ- யும், 2023-2024 ஆம் ஆண்டில் ரூ.10,500ஃ- யும் 2024-2025 ஆம் ஆண்டில் ரூ.16,500ஃ-யும் மொத்தம் ரூ.73,500ஃ- இல்லத்தில் வைத்து பராமரித்திட உணவு மருத்துவம், தொழிற்பயிற்சி உடைகள், அடிப்படை தேவைகள் வழங்கிடவும் அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கு ஊதியமாகவும் இல்ல செலவினமாக 2021-2022 ஆண்டில் ரூ.10,29,297ஃ-யும், 2022-2023 ஆண்டில் ரூ.13,49,800ஃ-யும் மொத்தம் ரூ.23,79,097ஃ- இத்திட்டத்தை செயல்படுத்தும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.
பல்வேறு வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் பாதிப்புஏற்ப தேவைப்படும் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின்கீழ் 2021-2022 ஆண்டு முதல் 2024-2025 ஆண்டு வரை 342 நபர்களுக்கு ஸ்கூட்டியும், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 25 நபர்களுக்கு சிறப்பு வசதியுடைய ஸ்கூட்டியும், 68 நபர்களுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலியும், மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் 243 நபர்களுக்கும், செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் பார்வைத்திறன் குறைபாடுடைய 240 நபர்களுக்கு ஸ்மார்ட் போன் (கைபேசிகளும்), 595 நபர்களுக்கு காதொலி கருவியும் 60 நபர்களுக்கு மூன்று சக்கர சைக்கிள்களும், 50 நபர்களுக்கு சக்கர நாற்காலியும், 179 நபர்களுக்கு ஊன்றுகோல்களும் பார்வையற்ற மாணக்கர்களுக்கு பயன்படும் வகையில் எழுத்தை பெரிதாக்கி காட்டும் 9 உருபெருக்கிகளும், பிரெய்லி முறையில் வாசிக்கும் திறனுடைய கருவி 5 நபர்களுக்கும் 22 நடைபயிற்சி உபகரணங்கள் கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 17 கால்தாங்கிகளும், 10 முளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை நிற்க வைக்க உபகரணங்கள் என பல்வேறு வகையாக உபகரணங்கள் மொத்தம் 2105 பயனாளிகளுக்கு. ரூ49826205ஃ- மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தினகீழ் 76 நபர்களுக்கு ரூ.48,54,500ஃ- மதிப்பிலாக செயற்கைகால்களும் வழங்கப்பட்டுள்ளது.
சொந்த வீடற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா 57 நபர்களுக்கும் அரசின் இலவச வீடுகட்டும் திட்டத்தின்கீழ் பயனடைய 24 மாற்றுத்திறனாளிகளுக்கு ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளது.
உரிமைகள் திட்டத்தின்கீழ் களப்பணியாளர்களை கொண்டு கணக்கெடுப்பு செய்யப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாத நபர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு 515 அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது
2024-2025ஆம் நிதியாண்டிற்கு மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் புரிய மானியம் வழங்கும் திட்டத்தின்கீழ் பயனடைந்த திருவாரூர் பகுதியினை சேர்ந்த மகமாயி கூறுகையில்,
என் பெயர் மகமாயி. எனக்கு வயது 38. நான் பிறந்தது முதல் கால் ஊனமுற்று மிகுந்த கஷ்டப்பட்டுவந்தேன். எனக்கான குறிப்பிட்ட வேலை என்று எதுவுமில்லாமல் அன்றாட வாழ்வு நடத்துவது மிகவும் சிரமமாக இருந்தது. இருப்பினும் எனக்கு மனுஉறுதியும், உழைக்கும் ஆர்வமும் இருந்ததது. இதற்கு உதவிக்கோரும் வகையில் எனது வீட்டின் அருகிலுள்ள படித்த நபர் ஒருவரிடம் கேட்டேன். அவர் தான் அப்பொழுது மாற்றுத்திறனாளித்துறை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ளது என்றார். நான் தெரியும் அங்கு பதிவு செய்துள்ளேன் என்றேன். உடனே அவர் அங்கு சென்று நீங்கள் சுயதொழில் புரியவுள்ள ஆர்வத்தினை தெரியப்படுத்த சொன்னார். அதனடிப்படையில், நான் மாற்றுத்திறனாளி அணுகி சுய தொழில் புரிய மானியம் வழங்குவதற்கு விண்ணப்பித்து அதனால் பயனடைந்து இப்பொழுது வீட்டிலிருந்து குடிசை தொழில் செய்து வருகிறேன். இவ்வாய்ப்பினை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
மாற்றுத்திறனாளிகள் துறையின் மூலம் மாதஉதவித்தொகை மூலம் பயனடைந்துவரும் மாற்றுத்திறனாளி நபர் அவர்கள் தெரிவித்ததாவது..
எனது பெயர் தேன்மொழி எனக்கு கணவர் இல்லை. நான் மட்டுமே எனக்கு மாதந்திர செலவு மேற்கொள்ள எனது அண்ணன் வீட்டிலிருந்தே பணம் வரும். அதுவும் ஒரு காலகட்டத்திற்கு மேல் தடைப்பட்டது. என்னால் மாதந்தோறும் எங்கும் கேட்க முடியவில்லை. இதனால் மிகவும் சிரமப்பட்டேன். இந்த நேரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உதவித்தொகை வேண்டி விண்ணப்பி;த்திருந்தேன். எனக்கு கை, கால் முடியாது. அதனடிப்படையில் மாற்றுத்திறனாளித்துறைக்கு விண்ணப்பம் பகிரப்பட்டது. அங்கு நான் சென்று தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து, உதவித்தொகை முதற்கொண்டு பெற்று வருகிறேன். இப்பொழுது எந்தவித சிரமம் இல்லாமல் உள்ளேன். இவ்வாய்ப்பினை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
தொகுப்பு:
மீ.செல்வகுமார், பி.காம்., பி.எல்.,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
திருவாரூர்.