பனமரத்துப்பட்டி ரோட்டரி சமுதாய குழுமம்(RCC) ,ரோட்டரி கிளப் ஆப் சேலம் கேலக்ஸி, சேலம் தனியார் மருத்துவமனை, சேலம் சிவராம்ஜி ரத்த வங்கி ஆகியவை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் (12 வது முறை )மற்றும் இரத்த தான முகாம் (8 வது முறை ) 18.05.25 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பனமரத்துப்பட்டி ஸ்ரீ பழனியாண்டவர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இம்முகாமின் போது பனைமரத்துப்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான அருள்முருகன் என்பவருக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது. உடன் கேலக்ஸி தலைவர் பொன்னுசாமி RCC ஒருங்கிணைப்பாளர் குமரேஷ் சிவராம்ஜி ரத்த வங்கி நிறுவனர் புஷல்கர் RCC தலைவர் தென்னரசு செயலாளர் நரசிம்மன் மற்றும் பொருளாளர் நாகராஜன் மற்றும் Rcc உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



