ராமநாதபுரம் பட்டணம்காத்தான் ஊராட்சியில் கன மழை காரணமாக தேங்கியுள்ள மழை நீரை துரிதமாக அகற்ற ஊராட்சித் தலைவர் சித்ரா மருதுபாண்டியர் மண்டபம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஆர்.ஜி.மருதுபாண்டியர் நேரடியாக சென்று ஊழியர்களை கொண்டு பம்ப் மோட்டார்கள் மற்றும் ஜேசிபி மூலம் துரித நடவடிக்கை எடுத்து தண்ணீரை அகற்றும் பணியை மேற்கொண்டனர். மாவட்ட கூடுதல் ஆட்சியர் வீர் பிரதாப் சிங், ஊராட்சிகள் உதவி இயக்குநர் திருப்பதி ராஜா, ஒன்றிய பொறியாளர் அர்ஜுனன் உள்ளிட்ட அதிகாரிகள் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.



