தருமபுரி, ஜூலை 15 –
தருமபுரியில் கர்மவீரர் காமராஜரின் 124வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு உதவும் உறவுகள் பவுண்டேஷன் மற்றும் பிரைம் க்ரோ சீட்ஸ் இணைந்து, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் மாபெரும் விழா தருமபுரி ரோட்டரி மஹாலில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் முனைவர் சௌமியா அன்புமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாவை சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் பிரைம் க்ரோ சீட்ஸ் நிர்வாக இயக்குனர் முத்துக்குமாரசாமி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், பாமக முன்னாள் மாவட்ட செயலாளர் பெரியசாமி, பாமக மாநில துணைத் தலைவர் சண்முகம், காமராஜ், முருகன், முருகசாமி மற்றும் தமிழ்நாடு தூய்மை பணியாளர் & டேங்க் ஆபரேட்டர் சங்க மாநிலத் தலைவர் கிருஷ்ணன், சமூக செயல்பாட்டாளர் புகழேந்தி, கிராம விழிகள் அறக்கட்டளை தலைவர் வெங்கடாசலம், ஆச்சி மசாலா மேலாளர் சிவா, ஐஸ்வர்யா ஃபுட் ப்ராடக்ட்ஸ் நிர்வாக இயக்குனர் சாமிநாதன், பேராசிரியர் முனைவர் முனிவேல், தொழிலதிபர் பாரதி, எஸ்.பி.ஐ. லைஃப் இன்சூரன்ஸ் ரகுநாதன்,
DKJ சரடு மண்டி நிர்வாக இயக்குனர் லட்சுமி நாராயணன், தருமபுரி ராகமளிகா மணி உள்ளிட்ட பல்வேறு சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், தமிழ்நாடு டேங்க் ஆபரேட்டர் மற்றும் தூய்மை பணியாளர் சங்கத்தின் மாநில, மாவட்ட, நகர பொறுப்பாளர்கள், சமூக அலுவலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியை கவியரசி தொகுத்து வழங்கினார். இறுதியில் உதவும் உறவுகள் பவுண்டேஷன் தலைவர் ராமன் நன்றி கூறினார்.



