திருச்சி, ஜூன் 1 –
திருச்சி கிழக்கு தொகுதியில் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் விஜய், என் நெஞ்சில் குடியிருக்கும் என்று மக்களுக்கு வணக்கம் என்றும் என்னோட இதயத்துக்கு திருச்சி கிழக்கு மக்கள் நெருக்கமானவர்கள். இன்னும் கொஞ்சம் அதிகமா ஆதரித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று முதல்வர் விஜய் கூறினார். நீங்கள் அமைத்துக்கொடுத்த ஆட்சியில் எல்லா நன்மைகளையும் பார்ப்பீர்கள் என்றார். தயவு செஞ்சு கேலி, கிண்டல் பேச்சுக்களை நிப்பாட்ட வேண்டாம் என தன்னை விமர்சிப்பவர்களுக்கும். தான் கோட் சூட் போடுவது குறித்து பேசிய முதல்வர் விஜய், ஏன் நாமெல்லாம் கோட் சூட் போடக்கூடாதா என்று கேள்வி எழுப்பினார்.
கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.50,000 வரை பயிர் கடன் பெற்ற குறு விவசாயிகளின் கடன் தள்ளுபடி என அறிவித்திருந்தோம். இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆட்சி அமைத்த இந்த நாட்களுக்குள் எங்களால் முடிந்த அளவு பயிர்கடன் தள்ளுபடி செய்துள்ளோம். இனி வரும் நாட்களில் இதுகுறித்து ஆலோசிப்போம்” விரைவில் நிதி நிலைமை சரிசெய்யப்பட்டு அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.
200 யூனிட் இலவச மின்சாரம் குறித்தும் பேசினார். முதல் 100 யூனிட் ஜெயலலிதா அம்மையார் கொடுத்தது என்றும், அது திமுக கொண்டுவந்த திட்டம் இல்லை என்றும் கூறினார். சட்டம் ஒழுங்கு சீரழிவுக்கு முந்தைய திமுக ஆட்சியே காரணம் என்று குற்றம்சாட்டினார்.
எப்போதும் திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டிஎன்று கூறினார். திமுகவும் மற்றும் சிலரும் சேர்ந்து கொண்டு அடித்த கூத்தை நாடு பார்த்தாக கூறினார். மேலும், சட்டசபை நிகழ்வுகளை பலரும் தற்போது ஆவலுடன் பார்ப்பதாக கூறினார்.தற்குறி என்று உங்களால் சொல்லப்பட்டவர்கள் தான் இன்று உங்களை கேள்விக்குறி ஆக்கியுள்ளார்கள் என்று கூறினார்.
திமுக இப்படி ஆனதுக்கு காரணம் என்னவென்று உங்கள் குடும்பத்துக்குள் சென்று கேளுங்கள் என்று மக்கள் சொல்வதாக குறிப்பிட்ட அவர் அதிமுகவை தீர்ந்து போன சக்தி என்று மறைமுகமாக சாடினார். திமுகவை தீய சக்தி மட்டுமல்ல, தூர சக்தி என்றும் தூர்ந்துபோன சக்தி என்றும் குறிப்பிட்டார். தேர்தலில் காசு கொடுத்து ஓட்டு வாங்குவதை ஒழித்துள்ளதாக கூறினார்.
“6 மாசம் அமைதியா இருப்போம்ன்னு சொன்னவங்க, 6 நாள் கூட அமைதியா இல்லை. கல்யாண வீட்ல கூட போயிட்டு புலம்பியிருக்காங்க” என திமுகவை விஜய் விமர்சித்துப் பேசியுள்ளார்.
திருச்சி எனக்கு ரொம்ப ஸ்பெஷல் என்று கூறினார். தேர்தல் ஆணைய விதிப்படி நான் பெரம்பூர் எம்எல்ஏவாக இருக்கலாம். ஆனால், இந்த விஜய்யின் இதயம் திருச்சி கிழக்கு தான் என்று தெரிவித்தார். தமிழகத்தின் இதயமாக இருக்கும் திருச்சி எப்போதும் எனக்கு செல்லப்பிள்ளை என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். முதல்வராக பதவியேற்ற பிறகு விஜய் முதல்முறையாக திருச்சிக்கு வந்து உரையாற்றியுள்ளது கவனிக்கத்தக்கது.



