தருமபுரி குமாரசாமி பேட்டையில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழா கொடியேற்றத்துடன் நடைபெற்றது. பின்னர் தீ மிதிப்பு விழா, முனியப்பனுக்கு பொங்கல் வைத்தால், பால் குடம் ஊர்வலம், அருள்மிகு ஸ்ரீ தாண்டவேஸ்வரருக்கும், ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும் திருக்கல்யாண வைய்பவம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து முக்கிய நிகழ்வான ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் பூத வாகனத்தில் மயான கொள்ளை பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். சேலம் செல்வம் குழுவினரின் விமான அழகு நிகழ்ச்சி ,பக்தர்கள் அலகுகள் குத்திக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். தருமபுரி எஸ். வி. ரோடு, வெளிப்பேட்டை தெருவில் எழுந்தருளில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவில்களில் மயான கொள்ளை திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதிலும் ஏராளம் பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.



