ஈரோடு அக் 23
ஈரோடு திண்டல் சைதன்யா சி.பி.எஸ்.சி. பள்ளி வளாகத்தில்
இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் ஈரோடு இணை ஆணையர் மண்டல திருக்கோயில்கள் சார்பாக பொருளாதாரத்தில் பின் தங்கிய 27 ஜோடி களுக்கு இலவச திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் பங்கேற்கும் ஒவ்வொரு ஜோடி களுக்கும் 4 கிராம் தாலி மெட்டி, பட்டு புடவை ஜாக்கெட், பாவாடை, பட்டு வேஷ்டி சட்டை, துண்டு, பாய், இரும்பு கட்டில், மெத்தை, தலையணை, பெட்சீட், கிரைண்டர், மிக்ஸி, கேஸ் அடுப்பு, மர பீரோ, சாமி படம், பித்தளை குத்து விளக்கு பித்தளை பூஜை தட்டு , பித்தளை மணி , பொங்கல் குண்டா, குங்கும சிமிழ், காபி குண்டா. வடிகட்டி, சாப்பாடு தட்டு, சிப்பி தட்டு, பொரியல் கிண்ணி, சிறிய பலகாரத்தட்டு, அடுக்கு குண்டா, டிபன் பாக்ஸ், சோப்பு டப்பா, பலகாரத்தட்டு, காய் வெட்டும் தட்டு சூரியுடன், கடாய், தாளிப்பு கரண்டி, காய்வடி கூரை பெரியது. ஊது பத்தி ஸ்டேண்ட், பன்னீர் தெளிப்பான் தண்ணீர் ஜக்கு, சந்தன கிண்ணம், விபூதி கப், காப்பி தட்டு, டம்ளர், சம்புடம் ஸ்பூன்,
சிறிய குண்டா, பிளாஸ்டிக் பக்கெட், பிளாஸ்டிக் மக் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது
. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.
இந்நிகழ்வில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், அந்தியூர்
சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜிவெங்கடாசலம், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நவமணி கந்தசாமி, இந்து சமய அறநிலையத்துறை ஈரோடு மண்டல இணை ஆணையர் பரஞ்ஜோதி, பண்ணாரி மாரியம்மன் கோயில் துணை ஆணையர் மேனகா, ஈரோடு உதவி ஆணையரும் திண்டல் வேலாயுத சாமி கோவில் செயல் அலுவலரும சுகுமார் பவானி சங்கமேஸ்வரர் கோயில் உதவி ஆணையர் அருள்குமார் திண்டல் முருகன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வேலுசாமி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை தலைவர் எல்லாப் பாளையம் சிவகுமார் லோட்டஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் சகாதேவன் மற்றும் ஈரோடு மாவட்ட செயல்
அலுவலர்கள், ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



