திருப்பூர், ஜூலை 10 –
பல்லடம், கே. அய்யம்பாளையத்தில் மின்சார கட்டணம் குறைக்க போராடிய போது துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்த விவசாய தியாகிகள் முத்துகுமாரசாமி மற்றும் சுப்பையன் ஆகியோரின் 53-ம் ஆண்டு நினைவு அஞ்சலி மற்றும் 1970 முதல் 1980 வரை துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்த விவசாய தியாகிகள் நினைவாக உழவர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது.
அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் நிறுவனத் தலைவர் ஜி.கே. சுப்பிரமணியம் தலைமையில் தியாகிகளின் திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். பிறகு 2000 க்கும் மேற்பட்டோர் வாகனப் பேரணியுடன் சென்று பல்லடத்தில் மலரஞ்சலி செலுத்தினர். கூட்ட நிகழ்வில் மாநில, மாநகர, மாவட்ட, ஒன்றிய, பேரூராட்சி, நகராட்சி, வார்டு, கிளை நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.



