தஞ்சாவூர். டிச.10
தஞ்சாவூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது
இக்கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித் தொகை ,குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 615 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார் கள்.
இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டார்.
மேலும் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் 30 ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாவும், தாட்கோ சார்பில் 3 நபர்களுக்கு கறவை மாடு வளர்ப்பு தொகை தலா ரூபாய்1 லட்சத்திற் கான ஆணையினை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில்மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார் தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சங்கர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.