தருமபுரியில் ஸ்ரீ கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் விழா வை ஆசிரியர்கள் தினமாக கல்லூரியின் நிறுவனர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கொண்டாடப்பட்டது. ஆசிரியர்களுக்கு கல்லூரி சார்பில் பொன்னாடை போர்த்தியும், சந்தன மாலை அணிவித்தும், நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.மாணவ, மாணவிகள் ஆசிரியர்களுக்கு பாத பூஜை செய்து ஆசிர்வாதம் பெற்றனர். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு குடும்ப நலத்துறை அதிகாரி கார்த்திகா கலந்து கொண்டார் .அவர் மாணவ, மாணவிகளுக்கு இளம் வயது திருமணத்தை தடுத்து நிறுத்தி அதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இவ்விழாவில் கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.



