சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் திருப்புவனம் வட்டாரம் பாப்பாகுடி கிராமத்தைச் சார்ந்த பயனாளிக்கு ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் 25 ஏக்கர் பரப்பளவில் நிரந்தர பந்தல் அமைப்பதற்கென பின்னேற்பு மானியத்திற்கான ஆணையினை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அவர்கள் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மரு. எஸ். செல்வ சுரபி இணை பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) ராஜேந்திர பிரசாத் இணை இயக்குனர் (வேளாண்மை) சுந்தர மகாலிங்கம் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் குருமணி உட்படப் பலர் உடனிருந்தனர்.



