நாகர்கோவில், ஜன. 23 –
facebook ID பயன்படுத்தி ஆபாச சாட்டிங் மற்றும் வயதிற்கு ஏற்ற பெண்கள் தனித்தனியாக ரேட் எனக் குறிப்பிட்டு ஆபாச உரையாடலுக்கும், உடலுறவுக்கும் அழைப்பு விடுத்து வாட்ஸ்அப் எண்ணும் கொடுக்கப்பட்டிருக்கும்.
அந்த எண்ணில் பேசும் பெண் ஒருவர் நீங்கள் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருக்கலாம் ஆபாச வீடியோ கால் மற்றும் ஆபாச சேட்டிங் செய்யலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதனை நம்பி பலரும் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர்.
இளம் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்க புகார் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளியை கண்டறிந்து கைது செய்ய எஸ் பி ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
அவரின் உத்தரவின்படி சைபர் கிரைம் போலீசார் வழக்கை பதிவு செய்து விசாரித்து குற்றவாளியை கைது செய்யும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் போலி Facebook ID மூலம் உல்லாசமாக இருக்கலாம் என பணம் பறித்து ஏமாற்றிய ராமநாதபுரம் பரமக்குடி பகுதியை சேர்ந்த முகமது ஷாஜகான் என்பவரது மகள் நபிலா பேகம் (27) என்பது கண்டுபிடிக்கப்பட்டடு போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சமூக வலைதளங்கள் மூலம் பெண்களின் படங்களைக் காட்டி பணம் வாங்கி, தொலைபேசி அழைப்புகளை புறக்கணிப்பது போன்ற ஆன்லைன் தொழில்முறை மோசடி நடந்து வருகிறது. இதனை நம்பி யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.



