கிருஷ்ணகிரி ஜன 7: தேமுதிக கழகப் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை எதிரே, பெண்களுக்கும் மாணவிகளுக்கும் தொடர்ந்து நடக்கும் பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், தமிழகம் முழுவதும் பெண்களுக்ன பாதுகாப்பை வலியுறுத்தியும், பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டியும், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும்-விவசாயிகளுக்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டியும், போதை மற்றும் கஞ்சா இல்லாத தமிழகத்தை உருவாக்கிடவும், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்.சின்னராஜி, தலைமை தாங்கினார். நகர கழகச் செயலாளர் ரவி வரவேற்பு உரையாற்றினார் கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு ஒன்றிய செயலாளர்கள் முருகன், வஜ்ரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மகளிர் அணியினர் கையில் பதார்த்தங்களை ஏந்தியவாறு தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில மாணவரணி துணை செயலாளர் திருப்பதி மாநில வர்த்தக அணி துணை செயலாளர் முருகேசன் முன்னாள் மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்ட துணை செயலாளர்களான முருகன், சதீஷ், சிவகாமிபாலசுப்பிரமணி, தலைமை செயற்குழு உறுப்பினர்களான எஸ்.பி.சீனிவாசன், லட்சுமணன், பொதுக்குழு உறுப்பினர்களான கே.பி.ரஞ்சித்குமார், காதர், ஏ.கே.வேலு, ஒன்றிய கழகச் செயலாளர்ககளான காவேரிப்பட்டினம் விஜய்வல்லரசு, போச்சம்பள்ளி அப்பாபிள்ளை, மத்தூர் மேற்கு விவேகானந்தன், ஊத்தங்கரை மேற்கு மாதேஸ்வரன், காவேரிப்பட்டினம் பேரூராட்சி ரமேஷ், நாகேஜுன பேரூராட்சி கோவிந்தராஜ், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி, பாலசுப்பிரமணியம், உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், மகளிர் அணி மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், சுமார் 300-க்கும் மேற்பட்டோர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இறுதியாக நகர அவை தலைவர் கே.சங்கர் நன்றியுரை ஆற்றினார்.



