வேலூர்_17
வேலூர் மாவட்டம் ,வேலூர் பகவான் மஹாவீர் தயாநிகேதன் ஜெயின் பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு பள்ளியின் செயலாளர் கே.ராஜேஷ் குமார் ஜெயின் தலைமையேற்று மாணவர்களுக்கு வாழ்த்துகளை வழங்கினார். விழாவின் சிறப்பு விருந்தினராக, வேலூர் விஜய் ஸ்ரீ நகைக்கடை உரிமையாளர் மற்றும் துணைத் தலைவர் எஸ்.எஸ்..ஜெயின் சங்க், சத்துவாச்சாரி ஸ்ரீ.எஸ்.ராஜேஷ் குமார் ஜெயின் மற்றும் ஸ்ரீமதி. R.சஞ்சு ஸ்ரீ ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர். செல்வி பலக் மாணவர்களுக்கு குழந்தைகள் தின வாழ்த்துகளை தெரிவித்தார். பள்ளி முதல்வர் .
எம்.மாலதி அனைவரையும் வரவேற்றார். இவ்விழாவில் கல்வி ஆலோசகர் . ஆர்.கீதா அவர்கள் மாணவர்களுக்கு குழந்தைகள் தின வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும் மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் நிறைவாக அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்டனர்